Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முத்தாயம்மாள்  பொறியியல் கல்லூரியில் வரும் 25 ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

நவம்பர் 15, 2023 10:51

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

வரும் 25.11.2023 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் இராசிபுரம் காக்காவேரி முத்தாயம்மாள் பொறியியல்  (தன்னாட்சி)  கல்லூரியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நடைபெற உள்ளது. 

இம்முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். 

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்பப்பட உள்ளனர்.  

வேலை வேண்டி விண்ணப்பிப்போர்,  தங்களுடைய சுய விவரம்  (Bio Data)> உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளவும். இம்முகாம் முற்றிலும் இலவசமானது.

வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும்.  

மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04286-222260, 7373887536 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்